புக்கிட் பாஞ்சாங்கில் பிரதமர் பங்கேற்ற மாபெரும் பொங்கல் கொண்டாட்டம்
புக்கிட் பாஞ்சாங்கில் கோலாட்டம், மயிலாட்டம் ஆகிய தமிழர் பாரம்பரியக் கலைகளுடன பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
புக்கிட் பாஞ்சாங்கில் கோலாட்டம், மயிலாட்டம் ஆகிய தமிழர் பாரம்பரியக் கலைகளுடன பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. புக்கிட் பாஞ்சாங் தொகுதியில் 13ஆவது ஆண்டாக நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியென் லூங் முதன்முறையாகக் கலந்துகொண்டார்.
குடியிருப்பாளர்களிடையே பிணைப்பை வலுப்படுத்துவது நிகழ்ச்சியின் நோக்கம்.
சிங்கப்பூரின் பல்லினச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் பல்வேறு இனத்தினர் ஒன்றுசேர்ந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.