ஜூரோங் ஈஸ்ட் சென்டிரலில் தீப்பற்றிய பேருந்து
ஜூரோங் ஈஸ்ட் சென்டிரலில் பேருந்து ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூரோங் ஈஸ்ட் சென்டிரலில் பேருந்து ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் பாத்தோக் அவென்யூ 1இன் சந்திப்பில் அந்தப் பேருந்து தீப்பற்றியது.
சம்பவம் குறித்து இரவு மணி 8.20க்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீப் பற்றியது தனியார் பேருந்து என்று சம்பவத்தை நேரில் கண்ட தன்யா V. 'செய்தி'யிடம் கூறினார்.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல் இல்லை.