தொழில் நிறுவனங்கள் இலாபத்தில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது - ஹோ சிங்
தொழில் நிறுவனங்கள் இலாபத்தில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது என்று துமாசிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹோ சிங் தெரிவித்துள்ளார்.
தொழில் நிறுவனங்கள் இலாபத்தில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது என்று துமாசிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹோ சிங் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் ஊழியர்களின் திறன் பயிற்சியில் முதலீடு செய்ய வேண்டும்.
அதே வேளையில் வாழ்வதற்கு உகந்த பூமியை உருவாக்கக் கடப்பாடு கொண்டிருக்க வேண்டும்.
அவர் சிங்கப்பூரில் நடைபெற்ற செயிண்ட் கேலன் கருத்தரங்கில் அவ்வாறு தெரிவித்தார்.
சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் தொழில் நிறுவனங்களுக்குப் பொறுப்பு இருப்பதாகத் திருவாட்டி ஹோ கூறினார்.
நீண்டகாலத்தில் நிறுவனங்கள் வெற்றிபெற வேண்டுமானால் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவற்றின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.
ஆனால் அது மட்டும் போதாது என்று திருவாட்டி ஹோ குறிப்பிட்டார்.