இந்தோனேசியா: இரண்டு நாள் தொடர்ந்த கலவரங்கள் அடங்கியுள்ளன
இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் இரண்டு நாட்கள் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் இரண்டு நாட்கள் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது.
அதிபர் தேர்தலில் திரு. ஜோக்கோ விடோடோ வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரத்தில் இறங்கினர்.
அதிபர் வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோவின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் மூண்டன.
ஆர்ப்பாட்டகாரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்.
இரண்டு நாள் நடைபெற்ற கலவரத்திற்குப் பிறகு தற்போது நிலைமை வழக்கத்திற்குத் திரும்பியுள்ளது.