இந்தியாவிற்கான வழக்கமான விமானச் சேவைகளில் செல்லும் பயணிகளுக்கான நடைமுறை என்ன?
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் 8 நகரங்களுக்குப் பயணிகள் விமானச் சேவைகளை மீண்டும் வழங்கவுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் 8 நகரங்களுக்குப் பயணிகள் விமானச் சேவைகளை மீண்டும் வழங்கவுள்ளது.
சென்னை, டில்லி, மும்பை ஆகிய நகரங்களுக்கான பயணச் சேவைகள் சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் வரும்.
அவற்றுடன் மேலும் சில இந்திய நகரங்களுக்குப் பயணிகள் விமானச் சேவை வழங்கப்படும்.
சிறப்புப் பயண ஏற்பாட்டின் கீழ் அல்லாமல், இந்தியாவிற்கான வழக்கமான விமானச் சேவைகளை நாடும் பயணிகளுக்கான நடைமுறை என்ன?
அவர்கள் இரண்டாம் கட்ட நாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட பயண, சுகாதாரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவேண்டும்.
--புறப்படுவதற்கு அதிகபட்சம் 2 நாள்களுக்கு முன்பு COVID-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
--கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யும் பரிசோதனை முடிவுகளைப் பெற்றிருக்க வேண்டும்.
எந்த விதமான COVID-19 பரிசோதனை?
--பயிற்சி பெற்ற நிபுணரால் மேற்கொள்ளப்படும் ART பரிசோதனை
அல்லது
--PCR பரிசோதனை
அங்கீகரிக்கப்பட்ட மருந்தகத்தில் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.
பரிசோதனை முடிவுகள் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
பரிசோதனை முடிவுகளில்:
--பரிசோதனை செய்யப்பட்ட தேதி
--பயணியின் பெயர்
--பிறந்த தேதி அல்லது கடப்பிதழ் எண்
ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
சிங்கப்பூர் வந்தவுடன் 7 நாள் தனிமைப்படுத்தும் உத்தரவு.
--குடியிருப்பு இடம்
--பதிவு செய்துகொண்ட ஹோட்டல்
--வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடு
ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தும் உத்தரவை நிறைவேற்றலாம்.
உத்தரவுக் காலம் முடிவதற்குமுன் PCR பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.