Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

3.2 கிலோகிராம் கஞ்சாவை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடத்தியதற்காக மூவர் கைது

சிங்கப்பூரில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
3.2 கிலோகிராம் கஞ்சாவை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடத்தியதற்காக மூவர் கைது

(படம்: Central Narcotics Bureau)

சிங்கப்பூரில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் 3.2 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

71 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசியும் 38, 67 வயதுடைய இரண்டு சிங்கப்பூரர்களும் போதைப் பொருளைச் சிங்கப்பூருக்குள் கடத்தி வர முயன்றனர் என்று கூறப்படுகிறது.

போதைப்பொருளுக்கு எதிரான சட்டத்தின் கீழ் 500 கிராமுக்கு மேற்பட்ட கஞ்சாவைக் கடத்துவோர் மரணதண்டனையை எதிர்நோக்கக்கூடும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்