Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கார் மோதும் முன் குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றிய பெண் மரணம்

சாலையில் குழந்தையைத் தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற 30 வயதுப் பெண் விபத்தில் மாண்டார்.

வாசிப்புநேரம் -
கார் மோதும் முன் குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றிய பெண் மரணம்

(படம்: TODAY)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சாலையில் குழந்தையைத் தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற 30 வயதுப் பெண் விபத்தில் மாண்டார்.

சம்பவம் நேற்று முன்தினம் லெண்ட்டோர் அவென்யூவில் நடந்தது.

இல்லப் பணிப்பெண் என்று நம்பப்படும் பெண் 2 வயதுக் குழந்தையைத் தள்ளுவண்டியில் அழைத்துக்கொண்டு சாலையைக் கடந்தார்.

அப்போது, அவரை நோக்கி ஒரு கார் வந்தது.

அவரையும் குழந்தையும் கார் மோதும் முன், குழந்தையை ஆபத்திலிருந்து அவர் காப்பாற்றினார்.

ஆனால், கார் பெண் மீது மோதியது. பின்னர், மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பெண் மாண்டார்.

இத்தகவலை Shin Min Daily நாளேடு வெளியிட்டது.

சம்பவத்தின் தொடர்பில் காரின் ஓட்டுநரான 44 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்