சாலையில் பற்றி எரிந்த கார் - ஓட்டுநர் மருத்துவமனையில்
உட்லண்ட்ஸ் அவென்யூ 1, 2-இன் சாலைச் சந்திப்பில் கார் ஒன்றில் திடீரெனத் தீப்பற்றிக்கொண்டது.
உட்லண்ட்ஸ் அவென்யூ 1, 2-இன் சாலைச் சந்திப்பில் கார் ஒன்றில் திடீரெனத் தீப்பற்றிக்கொண்டது.
அந்தக் காரில் இருந்த 59 வயது ஆடவர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு பிற்பகல் மணி 2:10 அளவில் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
காரின் முன்னாலுள்ள இயந்திரப் பகுதியில் தீப்பிடித்தது. அதை அதிகாரிகள் அணைத்தனர்.
ஓட்டுநர் சுய நினைவுடன் இருந்தார் என்றும் அவர் தற்போது Khoo Teck Puat மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ காரணமாக காரில் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் காணொளியில் காணமுடிந்தது.
விசாரணை தொடர்கிறது.