Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தின் 3ஆம் முனையத்தில் பேருந்து விபத்து

சாங்கி விமான நிலையத்தின் 3ஆம் முனையத்தில் பேருந்து விபத்து

வாசிப்புநேரம் -

சாங்கி விமான நிலையத்தின் 3ஆம் முனையத்திற்கு வெளியே பேருந்து விபத்து
நேர்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்து SBS Transit நிறுவனத்துக்குச் சொந்தமானது.

Skytrain ரயில் பாதையைத் தாங்கும் தூண் மீது பேருந்து மோதியதாக நம்பப்படுகிறது.

விபத்து நடந்ததை சாங்கி விமான நிலையக் குழுமம் உறுதி செய்துள்ளது.

தற்போது Skytrain ரயில் பாதையில் எந்தச் சேவையும் இல்லை என்றும் விபத்தால் ரயில் பாதையில் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டதா என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிற்பகல் 3 மணியளவில், சம்பவ இடத்தில் விமான நிலைய ஊழியர்களும் காவல்துறை அதிகாரிகளும் இருந்தனர்.

பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்திருந்திருந்தது. பேருந்துக்குள் பயணிகளோ, ஒட்டுநரோ இல்லை.

எவரும் காயமடைந்தார்களா என்பது பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.

- CNA/jt(gs)
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்