COVID-19: சாங்கி சிறைச்சாலையில் உள்ள 3 கைதிகளுக்கும், ஒரு தாதிக்கும் கிருமித்தொற்று
சாங்கி சிறைச்சாலையில் உள்ள 3 கைதிகளுக்கும், அங்கு பணிபுரியும் ஒரு தாதிக்கும் கொரோனா கிருமித்தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாங்கி சிறைச்சாலையில் உள்ள 3 கைதிகளுக்கும், அங்கு பணிபுரியும் ஒரு தாதிக்கும் கொரோனா கிருமித்தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நால்வருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிங்கப்பூர் சிறைச் சேவைத் துறை தெரிவித்தது.
கிருமித்தொற்று உள்ள மூன்று கைதிகளும் புதிதாகச் சிறைக்குள் வந்தவர்கள்.
அவர்களிடம் கிருமித்தொற்றுக்கான சோதனை நடத்தப்பட்டபோது, அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதன் பிறகு கைதிகள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 கைதிகள் உடல் நலம் தேறினர்.
ஒரு கைதி உடல் நலம் தேறினாலும் அவரிடம் கிருமிக்கான அறிகுறிகள் அகலவில்லை.
சிறைச்சாலையில் பணிபுரியும் தாதியும் குணமடைந்தார்.
3 கைதிகளுக்கும், தாதிக்கும் எப்போது கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது என்ற விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிதாகச் சிறைக்குள் வரும் கைதிகள் 14 நாள்கள் மற்ற கைதிகளுடன் ஒன்றாகத் தங்கவும் பழகவும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும் காலக்கட்டத்தில்,
சிறையில் உள்ள கைதிகளைக் காணப் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.