கட்டுமான நிறுவனத்தைச் சுமார் 9 மில்லியன் வெள்ளி மோசடி செய்ததாக 12 பேர் மீது குற்றச்சாட்டு
Civil Tech கட்டுமான நிறுவனத்தைச் சுமார் 9 மில்லியன் வெள்ளி மோசடி செய்ததாக 12 பேர் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
Civil Tech கட்டுமான நிறுவனத்தைச் சுமார் 9 மில்லியன் வெள்ளி மோசடி செய்ததாக 12 பேர் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
அதில் ஐவர், வேலை செய்ததாகப் பொய்யான தகவல்களைத் துணைக் குத்தகையாளர்களின் உதவியுடன் நிறுவனத்திடம் சமர்ப்பித்ததாகக் கூறப்பட்டது.
அவர்களில் நால்வர் அந்த நேரத்தில் நிறுவனத்தின் ஊழியர்களாகப் பணிபுரிந்தவர்கள்.
மற்றொருவர் Global Civil Engineering நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.
இந்த வழக்கில் ஏழு துணைக் குத்தகையாளர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அனைவருக்கும் அதிகபட்சம் 500,000 வெள்ளி அபராதம் அல்லது பத்தாண்டு வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.