50ஆவது ஆண்டு நிறைவை இணையம் வழி கொண்டாடவுள்ள சிங்கே ஊர்வல நிகழ்ச்சி
சிங்கே ஊர்வலம் 2022 மீண்டும் இணையம் வழி நடைபெறவுள்ளது.
சிங்கே ஊர்வலம் 2022 மீண்டும் இணையம் வழி நடைபெறவுள்ளது.
50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Chingay50 ஊர்வலத்தை, அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இணையம் வாயிலாகவும் சமூக ஊடகங்களிலும் கண்டு ரசிக்கலாம்.
Chingay50இன் கருப்பொருள் ‘Ignite Our Dreams’, அதாவது கனவுகளைத் தூண்டுங்கள்.
மக்களை ஒன்றிணைத்து, தனித்துவமான சிங்கப்பூர் அடையாளத்தைக் கொண்டாடுவது தான் சிங்கேயின் நோக்கம்,
என்று மக்கள் கழகத்தின் தலைமை நிர்வாகி லிம் ஹொக் யூ (Lim Hock Yu) கூறினார்.
1973ஆம் ஆண்டு சாலை ஊர்வலமாகத் தொடங்கியதிலிருந்து இன்று வரையிலான சிங்கேயின் பயணத்தை Chingay50 கொண்டாடும்.
மேலும், இம்முறை மக்கள் கலந்துகொள்ளப் பல்வேறு வாய்ப்புகளும் போட்டிகளும் இடம்பெறும்.
அது பற்றி மேலும் தெரிந்துகொள்ள www.chingay.gov.sg என்ற முகவரியை நாடுங்கள்.