COVID-19.....
ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியிருக்கும் நோய்ப்பரவல்.
அங்கிங்கு எனாதபடி எங்கும் பரவிய நோய், உலகில் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஒன்றே உலகம் என்றிருந்த மக்களை அவரவர் இருந்த இடத்தில் கட்டிப்போட்டது.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு ஜனவரி முதல் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
சிறிய நாடான சிங்கப்பூரில், நெருக்கமான சூழலில் வசிக்கும் மக்களிடையே கிருமி வெகு வேகமாகப் பரவிவிடும் என்ற அச்சம் தலைதூக்கியது.
சென்ற ஆண்டு....இந்த நாள்....
சிங்கப்பூரில் அதிரடித் திட்டம் (Circuit Breaker) நடப்புக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
முகக்கவசம் அணிவது, வீட்டிலிருந்து வேலை செய்வது, வீட்டிலிருந்து படிப்பது, இணையத்தில் சந்திப்பது என்று மக்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களுக்குப் பழகத் தொடங்கினர்.
கடந்த ஆண்டு அதிரடித் திட்டம் நடப்புக்கு வந்ததிலிருந்து, என்னென்ன நடந்தது? - ஒரு கண்ணோட்டம்.
- பிரதமர் லீ சியென் லூங் அதிரடித் திட்டம் பற்றி அறிவித்தார்.
- ஏப்ரல் 7-இலிருந்து மே 4 வரை அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 7: அதிரடித் திட்டம் தொடக்கம்
- கடற்கரைகள் மூடப்பட்டன
- தனி, பொது இடங்களில் ஒன்றுகூடல்களுக்குத் தடை
ஏப்ரல் 9:
- விளையாட்டு அரங்கங்களை மூடுவதாக அறிவிக்கப்பட்டது.
- ஏப்ரல் 14: முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது
- கடைத்தொகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்
ஏப்ரல் 21: அதிரடித் திட்டம், ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டது
- பிரதமர் லீ சியென் லூங் அதுபற்றி அறிவித்தார்
- சிங்கப்பூரின் பாலர் பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றின் வழக்கமான சேவைகள் ஜூன் முதல் தேதி வரை நிறுத்தப்பட்டது.
- அதிகமான வேலையிடங்கள் மூடப்பட்டன; தங்கும் விடுதிகளிலிருந்து ஊழியர்கள் வெளியேற அனுமதி இல்லை; பொருள்கள் வாங்க ஒருவர் மட்டுமே வெளியே செல்ல ஊக்குவிக்கப்பட்டது.
மே 5: சில வர்த்தகங்கள் செயல்பட அனுமதி
- முடிதிருத்தும் கடைகளுக்கு அனுமதி
- செல்லப் பிராணிகளுக்கான உணவு விற்பனை செய்வோர்,சலவைக்கூடங்கள் ஆகியவை பாதுகாப்புடன் செயல்பட அனுமதி
மே 19: அதிரடித் திட்டம்- மூன்று கட்டங்களாக தளர்த்தப்படுவதாக அறிவிப்பு
ஜூன் 1: அதிரடித் திட்டம் முடிவு
- வழக்கநிலைக்குத் திரும்ப, மூன்று கட்டங்களாகத் தளர்த்தப்பட்ட அதிரடித் திட்டம்
- அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழு அதுபற்றி அறிவித்தது.
முதல் கட்டம்:
- ஒரு சில வர்த்தகங்கள் மட்டும் மீண்டும் செயல்பட அனுமதி
- பாரம்பரியச் சீன மருத்துவம், நாட்பட்ட நோய்களுக்கான சேவை,வெளிநோயாளிச் சேவை, பல் மருத்துவம் ஆகியவை அவற்றுள் சில.
- பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தாத்தா, பாட்டியை நேரில் சென்று பார்க்க அனுமதி
இரண்டாம் கட்டம் (ஜூன் 19 முதல்)
- சில பூங்காக்கள் விளையாட்டுத் திடல்கள், கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
- சிறு குழுக்களாக நடைபெறும் சமூக நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டது.
- கூடுதல் நிறுவனங்கள், வர்த்தகங்கள், உணவு பானக் கடைகள் போன்றவை பாதுகாப்பு விதிமுறைகளுடன் திறக்கப்பட்டன.
- ஐவர் வரை ஒரு வீட்டுக்குச் செல்லலாம்.
மூன்றாம் கட்டம்: (டிசம்பர் 28 முதல்)
- சமூக, கலாசார, சமய நடவடிக்கைகள் வழக்கத்துக்குத் திரும்பின.
- அதிகபட்சம் 8 பேர் வெளியே ஒன்றாக உணவருந்தச் செல்லலாம்.
- எட்டுப் பேர் வரை ஒரு வீட்டுக்குச் செல்லலாம்.