Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றுக் குழுமங்களின் எண்ணிக்கை, 26 ஆக குறைந்தது

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றுக் குழுமங்களின் எண்ணிக்கை, 26 ஆக குறைந்தது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றுக் குழுமங்களின் எண்ணிக்கை, 26 ஆக குறைந்தது

(படம்: Gaya Chandramohan)

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றுக் குழுமங்களின் எண்ணிக்கை, 26 ஆக உள்ளது.

நோய்த்தொற்றுக் குழுமங்களால் 3-இலிருந்து 321 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த்தொற்றுச் சம்பவம் 64233,

90 Redhill Close நோய்த்தொற்றுக் குழுமம் ஆகியவற்றின் தொடர்பில் கடந்த இரண்டு வாரமாகப் புதிதாகக் கிருமித்தொற்று சம்பவங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.

அதனால், அவை நோய்த்தொற்றுக் குழுமப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன.

சமூக அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, சென்ற வாரம் 643ஆக அதிகரித்தது.

முந்திய வாரத்தில், அது 37ஆக இருந்தது.

சமூக அளவில் அடையாளம் காணப்பட்ட தொடர்பற்ற கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை, சென்ற வாரம் 68-ஆக அதிகரித்தது.

முந்திய வாரத்தில், அந்த எண்ணிக்கை 10-ஆக இருந்தது.

COVID-19 நோயாளிகள் 332 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

அவர்களில் 5 பேருக்கு, உயிர்வாயு வழங்க வேண்டியுள்ளது. அவர்களில் எவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில், ஒருவர், கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்