மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 1 கிலோகிராம் போதைமிகு அபின் பறிமுதல்
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 1 கிலோகிராம் போதைமிகு அபின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 1 கிலோகிராம் போதைமிகு அபின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சோதனையின்போது சந்தேக நபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாலையில் தியோங் பாரு பிளாஸாவிற்கு அருகில் போதைப்பொருள் தொடர்பான சந்தேக நடவடிக்கைகள் நடந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 4 சிங்கப்பூர் ஆடவர்களும் ஒரு மலேசிய ஆடவரும் அடங்குவர்.
சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் 464 போதைப் புழங்கிகளின் ஒரு வாரத் தேவைக்குப் போதுமானவை என்று கூறப்பட்டது.
விசாரணை தொடர்கிறது.