5 நாள் அதிரடிச் சோதனையில் சந்தேக நபர்கள் 109 பேர் கைது
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் 5 நாட்களாக நடத்திய அதிரடிச் சோதனையில் சந்தேக நபர்கள் 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் 5 நாட்களாக நடத்திய அதிரடிச் சோதனையில் சந்தேக நபர்கள் 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து இன்று காலை வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 274 கிராம் புதுவகை போதைப்பொருள், 91 கிராம் ஐஸ், 87 கிராம் போதைமிகு அபின், 33 கிராம் கெட்டமைன், 381 எக்ஸ்டசி மாத்திரைகள், 98 எரிமின்-5 மாத்திரைகள், சிறிதளவு கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவற்றின் மதிப்பு சுமார் 32,000 வெள்ளி.
அங் மோ கியோ, பிடோக், சாய் சீ, கேலாங், தெம்பனிஸ், சிராங்கூன், பொங்கோல், உட்லண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.