மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு 5 கிலோகிராம் கஞ்சாவைக் கைப்பற்றுதல், 6 பேர் கைது
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சுமார் 5 கிலோகிராம் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சுமார் 5 கிலோகிராம் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளது.
அதன் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள வீட்டிலிருந்து அதிகாரிகள் நேற்றுக் கைப்பற்றிய போதைப்பொருள் இது.
சுமார் 5 கிலோகிராம் கஞ்சாவும் ஒரு கிலோகிராம் புதிய வகை போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.
அவற்றின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 16 ஆயிரம் வெள்ளியும், ஒரு தராசும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டன.
அதன் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஆக இளையவர் 20 வயது சிங்கப்பூர் ஆடவர்.
அவர் போதைப்பொருள் கடத்தல்காரர் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
போதைப் புழங்கிகள் எனச் சந்தேகிக்கப்படும் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் மூவர் வெளிநாட்டினர்.