Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் அஸ்தி மாடங்கள் அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை சில நாள்கள் மூடப்பட்டிருக்கும்

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் அஸ்தி மாடங்கள் அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை சில நாள்கள் மூடப்பட்டிருக்கும்

வாசிப்புநேரம் -

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் அஸ்தி மாடங்கள் அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை வார இறுதிகளிலும் பொது விடுமுறைகளிலும் மூடப்பட்டிருக்கும்.

COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தேசிய சுற்றுப்புற அமைப்பு அறிவித்துள்ளது.

சுவா சூ காங், மண்டாய், யீஷுன் ஆகிய வட்டாரங்களில் உள்ள அஸ்தி மாடங்கள் பொதுமக்களுக்கு மூடப்படும்.

அவை அடுத்த மாதம் 24ஆம் தேதிவரை வார நாட்களில் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

வார இறுதிகளில் கூடும் கூட்டத்தை வார நாட்களில் மாற்றிவிடும் நோக்கில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக அமைப்பு குறிப்பிட்டது.

வார இறுதிகளில் வரும் கூட்டத்தில் 30 விழுக்காடு மட்டுமே வார நாட்களில் அஸ்தி மாடங்களில் திரள்கிறது.

மேலும், அஸ்தி மாடங்களின் மேற்பரப்பு அடிக்கடி துடைக்கப்படுவதாகவும் அமைப்பு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்