இந்த ஆண்டு 29,000 குடும்பங்களுக்கு ComCare நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது
சிங்கப்பூரில், ஜூலை மாத இறுதி நிலவரப்படி, 29,000 குடும்பங்களுக்கு ComCare நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில், ஜூலை மாத இறுதி நிலவரப்படி, 29,000 குடும்பங்களுக்கு ComCare நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் அது 25 விழுக்காடு அதிகம்.
கிருமிப்பரவல் தாக்கம் தொடரும் என்பதால், கூடுதலான குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க, ComCare திட்டத்தை மேலும் நீட்டிக்கவிருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.
மே மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்கும் இடையே 6,000 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நீட்டிப்பின் மூலம், இம்மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை மேலும் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்திட்டம் ஆதரவளிக்கும்.
2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 23ஆயிரம் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 21,000 குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டது.
நீட்டிக்கப்பட்ட ஆதரவு பெற்றவர்களைத் தவிர, மார்ச் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் சுமார் 6,000 பேர் நிதியுதவிக்கு விண்ணப்பிப்பதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.