Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

12 வயதுச் சிறுமியைப் பலாத்காரம் செய்த கட்டுமான ஊழியருக்குச் சிறை, பிரம்படி

சிங்கப்பூரில், 12 வயதுச் சிறுமியைப் பலாத்காரம் செய்த பங்களாதேஷ் கட்டுமான ஊழியருக்கு 22 ஆண்டு சிறைதண்டனையும் 18 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
12 வயதுச் சிறுமியைப் பலாத்காரம் செய்த கட்டுமான ஊழியருக்குச் சிறை, பிரம்படி

(படம்: TODAY)


(வாசிப்பு நேரம்: 2 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில், 12 வயதுச் சிறுமியைப் பலாத்காரம் செய்த பங்களாதேஷ் கட்டுமான ஊழியருக்கு 22 ஆண்டு சிறைதண்டனையும் 18 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வயது குறைந்தவருடன் பாலியல் உறவு கொண்டதற்காகத் தம் மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளையும் 40 வயது தாஸ் ரத்தன் சந்திரா ஒப்புக்கொண்டார்.

2017இல் MRT ரயிலில் சந்திரா சிறுமியை முதன்முதலில் சந்தித்திருக்கிறார்.

அப்போது அந்தச் சிறுமிக்கு வயது 12.

சிறுமியுடன் இருந்த தாத்தா, பாட்டிக்குத் தெரியாமல் சந்திரா தன்னுடைய கைத்தொலைபேசி எண்ணைச் சிறுமியிடம் கொடுத்திருக்கிறார்.

இருவரும் WhatsApp, Facebook மூலம் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளத் தொடங்கினர்.

தனக்கு 25 வயது தான் என்று சந்திரா சிறுமியிடம் பொய் சொல்லியிருக்கிறார்.

சிறுமியின் வயது தெரிந்தும் அவருடன் ஆபாசமாகப் பேசியிருக்கிறார் சந்திரா.

அவர்களிடையே இருந்த தொடர்பு, படிப்படியாக தகாத உறவுக்கு இட்டுச் சென்றது.

சிறுமியின் தாயார் சிறுமியின் நடவடிக்கையைக் கவனித்ததைத் தொடர்ந்து சந்திரா காவல்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

16 வயதுக்குட்பட்ட ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் சந்திராவுக்கு 20 ஆண்டு சிறைதண்டனையும் அபராதமோ பிரம்படியோ விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்