முதலீட்டாளர்களை ஏமாற்றிய சந்தேகம் - நிறுவனம் மீது விசாரணை
முதலீட்டாளர்களை ஏமாற்றிய சந்தேகத்தில் Ju Sheng International Consultancy Services எனும் நிறுவனம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
முதலீட்டாளர்களை ஏமாற்றிய சந்தேகத்தில் Ju Sheng International Consultancy Services எனும் நிறுவனம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
முதலீட்டாளர்களை நிறுவனம் மோசடி செய்ததா என்பதைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Ju Sheng நிறுவனத்தின் 49 வயது இயக்குநர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் உதவிவருவதாக வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தகுந்த உரிமம் இல்லாமல் அந்நியச் செலாவணிப் பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டுத் திட்டங்களை நிறுவனம் வழங்கிவந்தது.
அத்தகைய நடவடிக்கைகள் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன.
முதலீட்டாளர்களுக்கு வழங்கவேண்டிய பணத்தை Ju Sheng நிறுவனம் வழங்கத் தவறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.