Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மேலும் 11 பேர் மரணம் - மரண எண்ணிக்கை 701-ஆனது

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மேலும் 11 பேர் மரணம் - மரண எண்ணிக்கை 701-ஆனது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நேற்று COVID-19 நோய்த்தொற்றால் மேலும் 11 பேர் மாண்டனர்.

அவர்கள் 67 இலிருந்து 98 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

மாண்டவர்கள் அனைவருக்கும் வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை 701-ஆக உள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவின் 57.4 விழுக்காட்டுப் படுக்கைகளை COVID-19 நோயாளிகள் பயன்படுத்துகின்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவின் எத்தனை விழுக்காட்டு இடங்கள் COVID-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை சுகாதார அமைச்சு சென்ற மாதம் முதல் வெளியிட்டு வருகிறது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்