சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மேலும் 3 பேர் மரணம் - மரண எண்ணிக்கை 684ஆனது
சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மேலும் 3 பேர் மரணம் - மரண எண்ணிக்கை 684ஆனது
சிங்கப்பூரில் நேற்று COVID-19 நோய்த்தொற்றால் 3 பேர் மாண்டனர்.
மாண்டவர்கள் 69 வயதுக்கும் 83 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
மாண்ட மூவருக்கும் வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை 684ஆக உள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 54.2 விழுக்காட்டுப் படுக்கைகள் COVID-19 நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவின் எத்தனை விழுக்காட்டு இடங்கள் COVID-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை சுகாதார அமைச்சு சென்ற மாதம் முதல் வெளியிட்டு வருகிறது.