இந்தியாவில் கடன் பற்று அட்டைகளை அறிமுகப்படுத்த DBS திட்டம்
DBS வங்கி, இந்தியாவில் அடுத்த ஆண்டு கடன் பற்று அட்டைகளை வழங்கத் திட்டமிடுகிறது.
DBS வங்கி, இந்தியாவில் அடுத்த ஆண்டு கடன் பற்று அட்டைகளை வழங்கத் திட்டமிடுகிறது.
அடுத்த வருடத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் காலாண்டில் வங்கி அதன் கடன் பற்று அட்டைகளை இந்தியப் பயனீட்டாளர்களுக்கு வழங்கும் என்று அதன் மூத்த நிர்வாகி தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சியைப் பயன்படுத்தி ஆக்ககரமாய்ச் செயலாற்ற வங்கி முனைந்துள்ளது.
Citiகுழுமமும் இந்தியாவில் கடன் பற்று அட்டைகளை வழங்குவது குறித்துப் பரிசீலித்துவருகிறது.
கடந்த மே மாத நிலவரப்படி, இந்தியாவில் கடன் பற்று அட்டைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, சுமார் 49 மில்லியன்.
ரொக்கக் கழிவு அட்டைகளைக் கிட்டத்தட்ட 825 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.