Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீபாவளியையொட்டி உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கலாம்

தீபாவளியை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரை உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில்  வாகன நெரிசல் அதிகமாக இருக்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
தீபாவளியையொட்டி உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கலாம்

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தீபாவளியை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரை உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில்  வாகன நெரிசல் அதிகமாக இருக்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் வாகனச் சோதனையும், குடிநுழைவுச் சோதனையும் தாமதமாகலாம் என்று ஆணையம் அறிவுறுத்தியது.

அதன் காரணமாகப் பயணத்தில் தாமதத்தை எதிர்பார்க்கலாம் என்றும் அதற்கு ஏற்றவாறு பயணிகள் அவர்கள் பயணத்தைத் திட்டமிடுமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டது.

கூட்ட நெரிசல் இருந்தாலும் பாதுகாப்புச் சோதனைகள் வழக்கம்போல்  நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

கடைசி நிமிடக் குழப்பங்களைத் தவிர்க்கப் பயணிகள் சரியான கடப்பிதழ்களைக் கொண்டுவருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்