Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீபாவளியன்று இஸ்தானா பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்

தீபாவளி தினமாகிய இம்மாதம் 27ஆம் தேதியன்று இஸ்தானா பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும் என அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
தீபாவளியன்று இஸ்தானா பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்

(படம்: The Istana's website)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தீபாவளி தினமாகிய இம்மாதம் 27ஆம் தேதியன்று இஸ்தானா பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும் என அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை அது திறந்திருக்கும்.

பிரபல இந்தியப் பாடல்களின் இசைப் படைப்பை வருகையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

பாரம்பரிய சீன, மலாய் இசைக் கருவிகளைப் பயன்படுத்தி நவீன இந்திய இசையும் படைக்கப்படும். மக்கள் கழக இந்திய இசைக்குழுவினர் அங்கத்தைப் படைப்பர்.

இஸ்தானாவின் 150ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 'Istana Cookies' பலகாரங்களைச் சுவைக்கும் வாய்ப்பையும் வருகையாளர்கள் பெறுவர்.

சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அனுமதி இலவசம்.

மற்றவர்கள் 2 வெள்ளி கட்டணம் செலுத்தவேண்டும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்