பாலர் பள்ளி மானியத்துக்கு இன்னும் அதிகமான குடும்பங்கள் தகுதி
பாலர் பள்ளி மானியத்துக்குத் தகுதி பெறுவதற்கான குடும்ப வருமான உச்சவரம்பு 2,500 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதால், இன்னும் அதிகமான குழந்தைகள் பலன் பெறவுள்ளன.
பாலர் பள்ளி மானியத்துக்குத் தகுதி பெறுவதற்கான குடும்ப வருமான உச்சவரம்பு 2,500 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதால், இன்னும் அதிகமான குழந்தைகள் பலன் பெறவுள்ளன.
மேலும், பாலர் பள்ளிகளில் வெளிப்புறக் கற்றலை மேம்படுத்தும் திட்டங்களும் அறிமுகமாகவுள்ளன.
அதற்குரிய முறையான பயிற்சிகளும், கற்றல் திட்டங்களும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு மாநாட்டில், அந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
மேலும் அதிகமான பாலர்பள்ளிகள் வீடுகளுக்கு அருகே அமைக்கப்பட உள்ளன.
அதற்காக இந்த ஆண்டு இறுதியிலிருந்து, அரசாங்கம் புதிய பங்காளித்துவ நிறுவனங்களோடு செயல்படவுள்ளது.