Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதுநீரில் தயாரிக்கப்பட்ட பீர் - ஜூலையில் குறுகிய காலத்துக்கு விற்பனை

பொதுப் பயனீட்டுக் கழகமும் சிங்கப்பூரில் பீர் தயாரிப்பு நிறுவனமான Brewerkzஉம் இணைந்து NEWBrew என்ற புதுநீரால் செய்யப்பட்ட பீரை மீண்டும் வெளியிடவுள்ளனர்.

வாசிப்புநேரம் -
புதுநீரில் தயாரிக்கப்பட்ட பீர் - ஜூலையில் குறுகிய காலத்துக்கு விற்பனை

(படம்: Brewerkz)

பொதுப் பயனீட்டுக் கழகமும் சிங்கப்பூரில் பீர் தயாரிப்பு நிறுவனமான Brewerkzஉம் இணைந்து NEWBrew என்ற புதுநீரால் செய்யப்பட்ட பீரை மீண்டும் வெளியிடவுள்ளனர்.

சிங்கப்பூரின் அனைத்துலக நீர் வாரத்தை முன்னிட்டு, மறுபயனீடு செய்யப்பட்ட தண்ணீரான புதுநீரில் பீர் தயாரிக்கப்படவுள்ளது.

2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் அனைத்துலக நீர் வார நிகழ்ச்சியில் முதன்முதலில் NEWBrew அறிமுகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் அது நல்ல வரவேற்பைப் பெற்றது.

முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்ட நீரில் தயாரிக்கப்பட்ட பீரின் சுவையைப் பலர் விரும்பியதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

இம்முறை சுமார் 10,000 லிட்டர் NEWBrew மதுபானம் தயாரிக்கப்படவுள்ளது. முதன்முறையாக NEWBrew பொதுமக்களின் NTUC FairPrice பேரங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்படும்.

இவ்வாண்டின் NEWBrew சுவையைத் தயாரிக்க போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. சிங்கப்பூரைப் பிரதிபலிக்கும் வகையிலான சுவையைத் தயாரிக்கும் போட்டியாளரின் NEWBrew பீர் வகை கடைகளில் விற்பனை செய்யப்படும்

மேல் விவரங்களுக்கு: https://brewerkz.com/newbrew-hopularity-contest/ 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்