Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'COVID-19-க்கு எதிராக சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு, போராட்டத்தில் வெல்ல முடியும்'

சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெல்ல முடியும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெல்ல முடியும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் நாளை முழுமைத் தற்காப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.

2003 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் SARS நோயைச் சிறப்பாக முறியடித்தது.

அதேபோன்று, இந்தக் கிருமிப் பரவலையும் முழுமைத் தற்காப்புடன் முறியடிக்க முடியும் என்று டாக்டர் இங் சொன்னார்.

கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் கூறினார்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அயராது பாடுபடும் மருத்துவர், தாதியர், சுகாதாரப் பராமரிப்பாளர்கள், முதல்அணி ஊழியர்கள் ஆகியோரை டாக்டர் இங் பாராட்டினார்.

தேவையேற்பட்டால், சிங்கப்பூர் ஆயுதப்படை எந்நேரமும் உதவத் தயாராயிருப்பதாகவும் அவர் சொன்னார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்