சிங்கப்பூர் நிறுவனங்கள் வேலையிழப்பைக் குறைவாக வைத்துக்கொள்வதில் அரசாங்கம் உதவும்: தற்காப்பு அமைச்சர் இங்
சிங்கப்பூர் நிறுவனங்கள் வேலையிழப்பைக் குறைவாக வைத்துக்கொள்வதில் அரசாங்கம் உதவும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) கூறியுள்ளார்.
சிங்கப்பூர் நிறுவனங்கள் வேலையிழப்பைக் குறைவாக வைத்துக்கொள்வதில் அரசாங்கம் உதவும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) கூறியுள்ளார்.
COVID-19 கிருமிப் பரவலால் சிங்கப்பூர்ப் பொருளியலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடினமான சூழலைச் சமாளித்து வரும் வேளையில், வேலையிழப்பைக் குறைப்பதன் தொடர்பில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுடன் அரசாங்கம் இணைந்து செயல்படும் என்றார் அவர்.
முழுமைத் தற்காப்பு தினத்தையொட்டி, டாக்டர் இங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.