முதல் 2 வாரங்களில் 3 மடங்கு அதிகமான டெங்கிச் சம்பவங்கள்
சிங்கப்பூரில் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், கடந்த ஆண்டு அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க 3 மடங்கு அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பதிவாகின.
சிங்கப்பூரில் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், கடந்த ஆண்டு அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க 3 மடங்கு அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பதிவாகின.
Aedes aegypti கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொசுக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் டெங்கிச் சம்பவங்கள் வெகுவாக அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார, சுற்றுப்புற, நீர்வளத் துறைகளுக்கான மூத்த துணையமைச்சர் டாக்டர் ஏமி கோர் கூறினார்.
இன்று காலை ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள சுமார் 30 வீடுகளுக்கு வருகையளித்த டாக்டர் கோர், டெங்கித் தடுப்பில் உதவும்படி குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.