டெங்கிக் காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சம்
சிங்கப்பூரில் கடந்த வாரம் மட்டும், 666 டெங்கிச் சம்பவங்கள் பதிவானதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த வாரம் மட்டும், 666 டெங்கிச் சம்பவங்கள் பதிவானதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.
அது 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே வாரத்தில் பதிவான சம்பவங்களில் ஆக அதிகம்.
இதற்கு முன்னர் 2016 ஜனவரியில், 637 டெங்கிச் சம்பவங்கள் ஒரே வாரத்தில் பதிவாகின.
இவ்வாண்டில் நேற்றுவரை பதிவான டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 7,483.
கடந்த ஆண்டின் அதே காலக்கட்டத்தில் பதிவான டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கையைவிட அது சுமார் 4 மடங்கு அதிகம்.
கொசு இனப்பெருக்கம் காணும் உத்தேச இடங்களைத் துடைத்தொழிக்க உடனடி நடவடிக்கை தேவை என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியது.