Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் கர்ப்பிணியை மானபங்கம் செய்த ஆடவருக்குச் சிறை

சாங்கி விமான நிலையத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பெண்ணைக் காங் நிங் என்பவர் முதன்முதலில் பார்த்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தில் கர்ப்பிணியை மானபங்கம் செய்த ஆடவருக்குச் சிறை

(படம்: TODAY)


சாங்கி விமான நிலையத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பெண்ணைக் காங் நிங் என்பவர் முதன்முதலில் பார்த்திருக்கிறார்.

கர்ப்பமாக இருந்த அந்த 29 வயதுப் பெண் உடல்நலம் சரியில்லாததால் மூன்றாம் முனையத்தில் இருந்த இருக்கையில் கண் அயர்ந்தார்.

காங் அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டபோது, பெண் கண் விழித்து அங்கிருந்து வெளியேறினார்.

மறுநாளும் காங் மீண்டும் பெண்ணை மானபங்கம் செய்திருக்கிறார்.

சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் காங், வேலை நேரத்துக்குப் பின் பாதுகாப்பு உள்ள பகுதிகளில் அனுமதியின்றித் தங்கியிருந்தபோது இரண்டு சம்பவங்களும் நடந்ததாகக் கூறப்பட்டது.

DFSஇல் பணிபுரியும் அந்தப் பெண்ணை மானபங்கம் செய்தது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள், அனுமதியின்றிப் பாதுகாப்பு உள்ள பகுதிகளினுள் நுழைந்தது-ஆகிய குற்றச்சாட்டுகளைக் காங் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு 5 வாரச் சிறைத்தண்டனையும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்