Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புலாவ் செபராக் வட்டாரத்தில் உள்ள கடல் பகுதியில் 27 வயது முக்குளிப்பாளர் மரணம்

புலாவ் செபராக் வட்டாரத்தில் உள்ள கடல் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 27 வயது முக்குளிப்பாளர் மாண்டார்.

வாசிப்புநேரம் -

புலாவ் செபராக் வட்டாரத்தில் உள்ள கடல் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 27 வயது முக்குளிப்பாளர் மாண்டார்.

அவர் நேற்றுப் பிற்பகல் மாண்டதாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூரின் தென்புறத் தீவுகளில் ஒன்றான புலாவ் செபராக், எண்ணெய் சேகரித்து வைக்கும் இடமாகவும் கப்பல்கள் எரிபொருள் நிரப்பும் இடமாகவும் விளங்குகிறது.

உதவி நாடிக் காவல்துறைக்கு, நேற்று மாலை ஐந்தேகால் மணியளவில் அழைப்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து மயக்கமான நிலையில் ஆடவர் ஒருவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காயங்கள் ஏற்பட்டதால் அவர் பிறகு மாண்டதாக காவல்துறை கூறியது.

பணிபுரியும்போது ஆடவர் மீது ஏதோ ஒரு பொருள் விழுந்ததாக சேனல் நியூஸ்ஏஷியா தெரிவித்தது.

விபத்துக் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்