வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்கள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகின்றன
வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களை அதிகாரிகள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களை அதிகாரிகள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா ஊழியர்களுக்கும் மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டாலும் அதிகாரிகள் விழிப்புடன் இருப்பதாக மனிதவள அமைச்சு கூறியது.
நோய்ப்பரவல் இல்லை என்று அறிவிக்கப்பட்ட சில இடங்களில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுமானம், கடல்துறை போன்றவற்றில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 2 வாரத்துக்கு ஒருமுறை COVID-19க்கான மருத்துவச் சோதனை நடத்தப்படும்.
வேலையிடங்களிலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் முதலாளிகளின் முழு ஒத்துழைப்பு முக்கியம் என்றும் அமைச்சு தெரிவித்தது.