சிங்கப்பூர் முடக்கப்படவிருப்பதாகவும் DORSCON குறியீட்டைச் சிவப்பு நிலைக்கு உயர்த்தவிருப்பதாகவும் பரவும் தகவல்களில் உண்மையில்லை
சிங்கப்பூர் முடக்கப்படவிருப்பதாகவும் DORSCON குறியீட்டைச் சிவப்பு நிலைக்கு உயர்த்தவிருப்பதாகவும் பரவும் தகவல்கள் போலியானவை என்று சிங்கப்பூர் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் முடக்கப்படவிருப்பதாகவும் DORSCON குறியீட்டைச் சிவப்பு நிலைக்கு உயர்த்தவிருப்பதாகவும் பரவும் தகவல்கள் போலியானவை என்று சிங்கப்பூர் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
ரயில், பேருந்துச் சேவைகள் நிறுத்தப்படவிருப்பதாகப் பொய்த் தகவல் பரவுவதாகவும் Gov.sgஇன் WhatsApp சேவையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும்,
சந்தேகத்துக்குரிய தகவல் ஏதும் கிடைத்தால், அதிகாரப்பூர்வத் தளங்களை நாடி அதைச் சரிபார்த்துக் கொள்ளுமாறும் அரசாங்கம் வலியுறுத்தியது.
COVID-19 கிருமிப்பரவல் குறித்த தகவல்களைப் பெற Gov.sgஇன் WhatsApp சேவைக்குப் பதிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.