Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப்பொருள் அதிரடிச் சோதனைகளில் 168 பேர் கைது

தீவு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட இரு வார அதிரடிச் சோதனைகளில் சுமார் 168 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
போதைப்பொருள் அதிரடிச் சோதனைகளில் 168 பேர் கைது

(படம்: Central Narcotics Bureau)

தீவு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட இரு வார அதிரடிச் சோதனைகளில் சுமார் 168 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 433 கிராம் ஐஸ், சுமார் 561 கிராம் கஞ்சா, ஒரு கிராம் கெட்டமின், 6 கிராம் புது வகைப் போதைப்பொருள் ஆகியன சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றுடன் ecstasy, Erimin-5 மாத்திரைகள், போதைக் கலந்த மின்சிகரெட்டுத் திரவங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப் பொருள்களின் மொத்த மதிப்பு 163,000 வெள்ளி என்று தெரிவிக்கப்பட்டது.

அங் மோ கியோ, புக்கிட் மேரா, உட்லண்ட்ஸ், ஹவ்காங், சாய் சீ உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை தொடர்கிறது.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்