போதைப்பொருள் தொடர்பில் 94 சந்தேக நபர்கள் கைது
சிங்கப்பூர் முழுவதும் கடந்த 4 நாள்களாக நடந்த சோதனையில் சந்தேகத்துக்குரிய 94 போதைப்புழங்கிகள் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது.
சிங்கப்பூர் முழுவதும் கடந்த 4 நாள்களாக நடந்த சோதனையில் சந்தேகத்துக்குரிய 94 போதைப்புழங்கிகள் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் சிங்கப்பூர்க் காவல்துறையும் இணைந்து அந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன.
இம்மாதம் 4ஆம் தேதி காலையில் சோதனை நடவடிக்கை தொடங்கியது.
தீவின் பல பகுதிகளில் நடந்த சோதனை இன்று காலையுடன் முடிவடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
சோதனையில் சுமார் 18 கிராம் போதைமிகு அபின், 314 கிராம் ஐஸ், 81 கிராம் கஞ்சா, 384 கிராம் கெட்டமைன், 498 'எக்ஸ்டஸி' மாத்திரைகள், 652 Erimin-5 மாத்திரைகள், 40 கிராம் புதுவகைப் போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங், ஜூரோங், பாசிர் ரிஸ், செஞ்ஜா, தியோங் பாரு, உட்லண்ட்ஸ், யீஷூன் ஆகிய வட்டாரங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.