சோதனையின்போது 268,000 வெள்ளி மதிப்பிலான 3.2 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - பெண் கைது
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனையின்போது 268,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனையின்போது 268,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 479 கிராம் போதைமிகு அபின் (heroin), 546 கிராம் ஐஸ், 2,183 கிராம் ketamine, 5 துண்டு Subutex ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
டோவர் கிரசண்ட் (Dover Crescent) வட்டாரத்தில் 39 வயதுப் பெண் கைது செய்யப்பட்டார்.
சுமார் 479 கிராம் போதைமிகு அபினும் போதைப்பொருளைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு சாதனங்களும் அந்தப் பெண்ணிடம் இருந்தன.
டோவர் கிரசண்ட்டில் உள்ள குடியிருப்பு வீட்டில் சிறிய அளவு போதைப்பொருளும் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன் தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது.
-CNA/ad