நடைபாதைக் கூரையின் மேல் மின்ஸ்கூட்டரை ஓட்டியவர் கைது
நடைபாதைக் கூரையின் மேல் மின்ஸ்கூட்டரை ஓட்டியதாக நம்பப்படும் 19 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நடைபாதைக் கூரையின் மேல் மின்ஸ்கூட்டரை ஓட்டியதாக நம்பப்படும் 19 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் மின்ஸ்கூட்டரை ஓட்டியதைக் காட்டும் படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
அதன் தொடர்பில் காவல்துறையினருக்கு நேற்றுப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.
புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள லோம்பாங் சாலையில் அந்தச் சம்பவம் திங்கட்கிழமையன்று நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையின் கேமராக்களில் பதிவான படங்கள், பொதுமக்களிடம் கிடைத்த விவரங்கள் ஆகியவற்றைக் கொண்டு அங் மோ கியோ பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் ஆடவரைக் கண்டுபிடித்து கைதுசெய்தனர்.
கண்மூடித்தனமான செயலில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், மற்றவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்கு 6 மாதச் சிறைத்தண்டனையோ 2,500 வெள்ளி வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.