சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு 10 பில்லியன் வெள்ளி வரையிலான முதலீடுகள் கிட்டும்: பொருளியல் வளர்ச்சிக் கழகம்
சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு 10 பில்லியன் வெள்ளி வரையிலான முதலீடுகள் கிட்டும் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் முன்னுரைத்துள்ளது.
சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு 10 பில்லியன் வெள்ளி வரையிலான முதலீடுகள் கிட்டும் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் முன்னுரைத்துள்ளது.
பொருளியல் நிலையற்றதன்மை இந்த ஆண்டு கணிசமான அளவு இருந்தபோதும், சென்ற ஆண்டைப் போலவே முதலீடுகளுக்கான கடப்பாடு நிலையாக இருக்குமென்று கழகம் கூறியது.
வருடாந்தர மறு-ஆய்வு அறிக்கையில், இந்த ஆண்டு முக்கியத்துவம் தரப்படவிருக்கும் 5 அம்சங்களைக் கழகம் கோடிகாட்டியது.
ஆசியானில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதும், புதிய மின்னிலக்கப் பொருளியல் முறையில் கவனம் செலுத்துவதும் அவற்றில் அடங்கும்.
இந்த ஆண்டில், 8 முதல் 10 பில்லியன் வெள்ளி வரையிலான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகக் கழகம் குறிப்பிட்டது.
நிறுவனங்களின் மொத்த வருடாந்தர வர்த்தகச் செலவு, 5 முதல் 7 பில்லியன் வெள்ளி வரை இருக்குமென்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மேலும், 16,000 முதல் 18,000 வரையிலான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு, முன்னுரைக்கப்பட்டதைவிட அதிக முதலீட்டை சிங்கப்பூர் ஈர்த்தது.
சிங்கப்பூர் அனைத்துலக ரீதியில் தொடர்ந்து வலுவான வர்த்தக நகராகவும், உற்பத்தி நடுவமாகவும் விளங்குவதை அது காட்டுவதாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகத் தலைவர் பெ சுவான் ஜின் (Beh Swan Gin) குறிப்பிட்டார்.