Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ்ச்சுடர் 2019: உன்னத முயற்சி மேற்கொண்ட பள்ளிக்கும் அமைப்புக்கும் கல்வி விருதுகள்

தமிழ்ச்சுடர் 2019க்கான கல்விப் பிரிவு விருதுகளை சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி,  சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை வென்றுள்ளன.

வாசிப்புநேரம் -

தமிழ்ச்சுடர் 2019க்கான கல்விப் பிரிவு விருதுகளை சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி,  சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை வென்றுள்ளன.

பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு, தமிழ்மொழியை வளர்க்கவும், இளையர்களிடையே தமிழ்மொழியைக் கொண்டுசெல்லவும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டன.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் ஈராண்டுக்கு ஒரு முறை ‘தமிழ்ச்சுடர்’  விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளர்.

விருதுகளுக்குப் பல பள்ளிகளும் கல்வி நிலையத்தினரும் அமைப்பினரும் தனிநபர்களும் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்தனர்.

விருது வழங்கும் நிகழ்ச்சி ஷங்ரிலா ஹோட்டலில் இன்று (8 நவம்பர் 2019) நடைபெறுகிறது.

சமூகத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என 250க்கும் மேற்பட்டோர் விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். 

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு. விக்ரம் நாயர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். வெற்றிபெற்றவர்களுக்கு அவர் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்