கூடுதல் விழிப்புணர்வால் சிறார், முதியோர் துன்புறுத்தல் குறித்த புகார்கள் அதிகரிப்பு: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு
கடந்த 5 ஆண்டுகளில் சிறார், முதியோர் துன்புறுத்தல் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகமது ஃபைஷால் இப்ராஹிம் (Muhammad Faishal Ibrahim) கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் சிறார், முதியோர் துன்புறுத்தல் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகமது ஃபைஷால் இப்ராஹிம் (Muhammad Faishal Ibrahim) கூறியுள்ளார்.
அத்தகைய சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதே அதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
துன்புறுத்தல்கள் குறித்து பெரும்பான்மையோர் அமைதியாக இருந்த காலம் போய் தற்போது பலர் அதற்கு எதிராகப் புகார் செய்வதாக டாக்டர் ஃபைஷால் குறிப்பிட்டார்.
விழிப்புணர்வை அதிகரிக்க, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அது பயிற்சிகளையும் வழங்கி வருவதாக அவர் சொன்னார்.