காலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்
சிங்கப்பூரில் மின்னியல் சாலைக் கட்டண முறையின் மூன்று நுழைவாயில்களில் கட்டணம் நீக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் மின்னியல் சாலைக் கட்டண முறையின் மூன்று நுழைவாயில்களில் கட்டணம் நீக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
மரினா கரையோர விரைவுச்சாலையில் செயல்படுத்தப்படும் இரு நுழைவாயில்களுக்கும், அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் உள்ள ஒரு நுழைவாயிலுக்கு இது பொருந்தும்.
புதிய நடைமுறை இம்மாதம் (பிப்ரவரி) 18ஆம் தேதி அறிமுகம் காணும்.
மரினா கரையோர விரைவுச்சாலையில் செயல்படுத்தப்படும் நுழைவாயில்களில் காலை 7.30 மணியிலிருந்து 8 மணி வரை இந்தப் புதிய கட்டண முறை நடப்பிலிருக்கும்.
அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் இதற்கு முன்னர் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை நுழைவாயிலைப் பயன்படுத்துவோர் 1 வெள்ளி கட்டணம் செலுத்தி வந்தனர்.
ஆனால், அந்த நேரத்தில் இனி மின்னியல் சாலை கட்டணம் செலுத்த வேண்டாம்.