Esplanade நீர் முகப்பு அரங்கிற்கு $9 மில்லியன் நிதித் திரட்டு
சிங்கப்பூரில் Esplanade நீர் முகப்பு அரங்கு அமைப்பதற்காக புதிய நிதி திரட்டும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் Esplanade நீர் முகப்பு அரங்கு அமைப்பதற்காக புதிய நிதி திரட்டும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
30 மில்லியன் வெள்ளி அரங்கிற்குத் தேவைப்படும் எஞ்சிய ஒன்பது மில்லியன் வெள்ளி நிதியைத் திரட்டுவது நோக்கம்.
2017 ஏப்ரலில் புதிய நீர் முகப்பு அரங்கு பற்றி அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு அந்த அரங்கு தயாராகி விடும்.
சென்ற ஆண்டு Singtel நிறுவனம் வழங்கிய 10 மில்லியன் வெள்ளி நிதிக்கு நன்றி கூறும் வகையில் முதல் 15 ஆண்டுகளுக்கு அது Singtel நீர் முகப்பு அரங்கு என்றழைக்கப்படும்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் தொடக்கமாக பத்து மில்லியன் வெள்ளி நிதி வழங்க உறுதியளித்துள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மேலும் ஒரு மில்லியன் வெள்ளி நிதி திரட்டப்பட்டது.
550 இருக்கைகள் கொண்ட நீர் முகப்பு அரங்குக்கான கட்டுமானப் பணி இன்று தொடங்கியது.
அதன் தொடர்பில், பொதுமக்கள், புரவலர்கள், அறநிறுவனங்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி திரட்டும் நடவடிக்கைகளை நடத்த Esplanade திட்டமிட்டுள்ளது.