தளர்த்தப்பட்டிருக்கும் விதிமுறைகளால் புத்துணர்ச்சி பெற்றிருக்கும் வர்த்தகங்கள்
அதிரடித் திட்டம் முடிந்து மூன்றாம் கட்டம் தொடங்கி சுமார் 2 வாரங்கள் ஆகிவிட்டன.
அதிரடித் திட்டம் முடிந்து மூன்றாம் கட்டம் தொடங்கி சுமார் 2 வாரங்கள் ஆகிவிட்டன.
சமூகளவில் பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. சிங்கப்பூரர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் இது ஒரு புதுத்தெம்பைக் கொடுத்துள்ளது.
முன்பு 5 பேர் மட்டுமே உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடிந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 8க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
உணவகங்கள் இந்த மாற்றங்களால் நல்ல பலனடைந்திருப்பதாகக் கூறுகிறார் இந்திய உணவகங்கள் சங்கத்தின் ஆலோசகர் திரு. சண்முகம்.
"நிறைய பிரச்சினை இருந்தாலும் மெதுவாக நாம் கொஞ்சம் கொஞ்சமாக 5லிருந்து 8 பேர் இந்த மாதிரி போகும்பொழுது அது மகிழ்ச்சியைத்தான் கொடுக்கிறது. ஒரு தன்னம்பிக்கை இருக்கிறது. உணவகங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கிறது."
மூன்றாம் கட்டம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?
சிங்கப்பூரர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?
தடுப்பூசி பற்றிய உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்.
இன்றிரவு 9.30 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் இடம்பெறும் எதிரொலி நிகழ்ச்சியில் இவைபற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.