Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முகக் கவசம் அணியாமல் பல தடவை விதிமுறைகளை மீறியதாக 63 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

முகக் கவசம் அணியாமல் பல முறை பக்கத்து புளோக்கில் உள்ள நபர்களைச் சந்தித்ததாக 63 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

வாசிப்புநேரம் -
முகக் கவசம் அணியாமல் பல தடவை விதிமுறைகளை மீறியதாக 63 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

படம்: Gaya Chandramohan

முகக் கவசம் அணியாமல் பல முறை பக்கத்து புளோக்கில் உள்ள நபர்களைச் சந்தித்ததாக 63 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டத்தின்போது, புளோக் 75 வாம்போ டிரைவில் (Whampoa Drive) வசிக்கும் ஓங் கிங் ஹுவா என்ற ஆடவர், பல வேளைகளில் விதிமுறைகளை மீறியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

நியாயமான காரணம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றது, ஒரே வீட்டில் வசிக்காதோரைச் சந்தித்தது, முகக் கவசம் அணியாமல் இருந்தது உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

ஓங் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

வழக்கு அடுத்த மாதம் 10-ஆம் தேதி தொடரும்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு 6 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்