போலி 50 வெள்ளி நோட்டுகளைப் பயன்படுத்திய 21 வயது ஆடவர் கைது
சிங்கப்பூர்: இம்மாதம் இரு வேறு தருணங்களில் போலி 50 வெள்ளி நோட்டுகளைப் பயன்படுத்திய 21 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர்: இம்மாதம் இரு வேறு தருணங்களில் போலி 50 வெள்ளி நோட்டுகளைப் பயன்படுத்திய 21 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இத்தகவலைக் காவல்துறை இன்று (பிப்ரவரி 13) வெளியிட்டது.
கடந்த சனிக்கிழமை, சுவா சூ காங் ஸ்டிரீட் 51இல் இருக்கும் கடை ஒன்றில் இரு போலி 50 வெள்ளி நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதே நாள் மாலை சுமார் 5 மணிக்குச் சந்தேக நபரைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஒரு மடி கணினி, அச்சு இயந்திரம், சில போலி 50 வெள்ளி, 100 வெள்ளி நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
போலி நோட்டுகள் நகலெடுக்கப்பட்டவை என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
நோட்டுகளில் வழக்கமாக இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் அவற்றில் இல்லை.
சந்தேக நபர் மீது நீதிமன்றத்தில் இன்று மாலை குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபணமானால் அவருக்கு 20 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.