Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போலி கனடியக் கடப்பிதழை வைத்திருந்த இலங்கை ஆடவர் கைது

போலி கனடியக் கடப்பிதழுடன் சிங்கப்பூரைக் கடக்க முயன்ற இலங்கை ஆடவருக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த ஆடவருக்கும் 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
போலி கனடியக் கடப்பிதழை வைத்திருந்த இலங்கை ஆடவர் கைது

(படம்: ICA)

போலி கனடியக் கடப்பிதழுடன் சிங்கப்பூரைக் கடக்க முயன்ற இலங்கை ஆடவருக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த ஆடவருக்கும் 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

30 வயது பரராசசிங்கம் பூவேந்தன் போலிக் கனடிய கடப்பிதழை வைத்திருந்தார்.

அவருக்கு உடந்தையாக இருந்த 48 வயது மாரிமுத்து சுப்பிரமணியன், போலிப் பயணப் பத்திரங்களை வைத்திருந்தார். குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

இலங்கைக்கு வெளியே வேலை தேடும் நோக்கில், பரராசசிங்கம் போலி கனடியக் கடப்பிதழைப் பெற்றார். அதில் அவரின் நிழற்படம் இருந்தது. ஆனால் விவரங்கள் அவருடன் ஒத்துப்போகவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி மாரிமுத்துவுடன், கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு வரப் பரராசசிங்கத்தின் முகவர் ஏற்பாடு செய்திருந்தார். அவர்கள் தங்களின் சொந்த இலங்கைக் கடப்பிதழ்களைப் பயன்படுத்துவது திட்டம்.

பின்னர் போலிக் கடப்பிதழைப் பயன்படுத்தி பரராசசிங்கம் மெல்பர்ன் செல்ல மாரிமுத்து உதவ எண்ணினார்.

சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்தில், சிங்கப்பூர் அதிகாரிகள் போலிக் கடப்பிதழ் வைத்திருந்த பரராசசிங்கத்தைக் கைதுசெய்தனர்.

கொழும்பு திரும்பவிருந்த மாரிமுத்து சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் கைது செய்யப்பட்டார்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்