Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2 வயது மகளைக் கொன்றதாகத் தந்தையின் மீது குற்றச்சாட்டு

2 வயது மகளைக் கொன்றதாக 34 வயது ஆடவர் மீது மருத்துவமனையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

2 வயது மகளைக் கொன்றதாக 34 வயது ஆடவர் மீது மருத்துவமனையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தந்தையர் தினத்தன்று (ஜூன் 16) அந்தச் சம்பவம் நடந்தது.

சிங்கப்பூரரான தியோ ஜான்பாய் ஜானின் மீது செங்காங் பொது மருத்துவமனையில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு தியோ ஆஷ்லி கிளேரைக் கொலை செய்ததாக அவரின்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அதே நாளில், புளோக் 163B ரிவர்வேல் கிரெசண்ட்டில் உள்ள படுக்கையறையில் காவல்துறையினர் அவரைக் காயங்களுடன் கண்டனர்.

அவரின் பக்கத்தில் குழந்தை அசைவின்றிக் காணப்பட்டது.

குழந்தை மாண்டதாக ஞாயிற்றுக்கிழமைப் பின்னிரவு பன்னிரண்டரை மணி வாக்கில் அறிவிக்கப்பட்டது.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தியோவுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்